புதுடில்லி, ஜூலை 19– ‘இரண்டாம் வகுப்பு’ பயணிகள் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்று கூறியுள்ளது.
ரயில்வே விபத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில் நிலையங்களில் நிலவும் அதிகப்படியான கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுவும் விபத்துக்களுக்கு காரணமாக உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னர், இரண்டாம் வகுப்பு பயணி என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது பயணக் கட்டணம் தொடர்புடையது என்றாலும் அரசியல மைப்புச் சட்ட உணர்வுகளுக்கு முரணானதாக உள்ளதாக கூறினர். எனவே, இரண்டாம் வகுப்பு பயணி என்று குறிப்பிடக்கூடாது என்று தெரி வித்தனர். உயர்வகுப்பு, கீழ் வகுப்பு பயணிகள், இரண்டாம் வகுப்பு பயணி கள் என்று ரயில்வே துறை பயணி களை குறிப்பிடுவதை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
‘இரண்டாம் வகுப்பு பயணிகள்’ என்ற சொல்லை மாற்றவேண்டும்! ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Leave a Comment
