ராமன் கோயில் நிதி முறைகேடு புகார் அடுத்த கட்ட விசாரணைக்காக மீண்டும் அயோத்தி செல்கிறது சிறப்புப் புலனாய்வு குழு!

1 Min Read

அயோத்தி, ஜூலை 14 உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயில் நிதி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்அய்டி) அடுத்தகட்ட விசாரணைக்காக விரைவில் மீண்டும் அயோத்திக்கு செல்ல உள்ளது.

சிறப்புப் புலனாய்வு குழு அமைப்பு

ராமன் கோயில் நிதி முறைகேடு தொடர்பான புகார்களை விசாரிக்க உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு கடந்த ஜூன் 15-ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. இந்த உயர் மட்டக் குழுவில் பின்வரும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்:

விஜய் விஸ்வாஸ் பந்த் (தலைவர்) – லக்னோ பிரிவு ஆணையர் கிரண் எஸ் – அய்ஜிபி (IGP)நீல் ரத்தன் – நிதித்துறை சிறப்பு செயலாளர்

முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த சிறப்பு குழுவினர் தங்கள் முதற்கட்ட விசாரணையை முடித்து, அதுகுறித்த விரிவான அறிக்கையை கடந்த ஜூன் 23-ஆம் தேதி மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள் துறை) சஞ்சய் பிரசாத்திடம் முறைப் படி சமர்ப்பித்தனர்.

முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக: கோயில் நிதி தொடர்பான முக்கிய ஆவணங்களை நேரடியாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நன்கொடை நிர்வாகத்தில் தொடர்புடைய பிற முக்கிய நபர்களிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, சிறப்பு புலனாய்வு குழுவினர் மிக விரைவில் மீண்டும் அயோத்திக்கு விரைந்து தங்களது விசாரணையைத் தொடங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *