மகாராட்டிரத்தில் மீண்டும் கூட்டணிக் குழப்பம் அணி மாறுகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்?

மும்பை, ஜூலை 10- மகாராட் டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, முன்னாள் முதலமைச்சரும், தேசியவாத காங் கிரஸ் கட்சித் (சரத் பவார்) தலைவருமான சரத் பவார் சந்தித்துப் பேசியுள்ளார். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிர மாநில அரசி யலில் அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா அணியைச் சேர்ந்த 9 மக்களவை உறுப்பினர்களில் 6 பேர், பாஜக கூட்டணியில் உள்ள துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணியில் இணைந்தனர்.

நாடு முழுவதும் எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ தன் வசத்துக்கு பாஜக இழுத்து வருகிறது. டில்லியில் ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர்g்கள், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் தத்தமது கட்சிகளை உடைத்து பாஜகவுக்குத் தாவி யுள்ளனர். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள், இந்திய குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

தற்போது அதே பாணியில் மகாராட்டிராவில் சிவசேனாவின் பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களை இழுத்துள்ள நிலையில் அடுத்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு பாஜக இலக்கு வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ், மறைந்த அஜித் பவார் தலை மையிலான தேசியவாத காங் கிரஸ் கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் இறந்த பின்னர், அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல மைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் தான் தனது எதிரணியில் இருந்து மக்களவை உறுப்பினர்களை லாவகமாக இழுத்துள்ள ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேரில் சென்று சந்தித்துப் பேசினார். ஏக்நாத் ஷிண்டேவின் அலுவலகமான விதான் பவனில் இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு காரணமாக, சரத் பவார் தலைமை யிலான அணியும் பாஜக கூட் டணி வசம் செல்லக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சரத் பவார் தலைமையிலான கட்சி இதற்கு மறுக்கவோ, ஒப்புக் கொள்ளவோ இல்லை. இதனால் மகாராட்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் பவார் கூட்டணியிலுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.

இது குறித்து சிவசேனா (உத்தவ்) மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறும்போது, “பவார்-ஷிண்டே சந்திப்பால் பல ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும் இது பவார் கட்சி மீது வைத்துள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. கட்சித் தலைவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை கீழே இறக்கியுள்ளது” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *