ஒரு வாரத்துக்குள் சீரமைத்துத் தராவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் மேனாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!

2 Min Read

சென்னை, ஜூலை 7– முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை இன்னும் ஒரு வாரத்துக்குள் சீரமைத்துத் தரவில்லை என்றால் தி.மு.க. சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என, தி.மு.க. மேனாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்துள்ளார்.

கடல்நீரைக்
குடிநீராக்கும் திட்டம்

இதுகுறித்து, அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில், நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தென்சென்னை மற்றும் செங்கல் பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் இத்திட்டத்தை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினின் பெயர் பொறித்த கல்வெட்டை, தற்போதைய தவெக அரசு சிதைத்து அகற்றியுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரு வாரத்தில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அகற்றப்பட்ட கல்வெட்டை இன்னும் ஒருவார காலத்துக்குள் மீண்டும் அதே இடத்தில் சீரமைத்து வைக்கவில்லை என்றால், தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
தவெக அரசு பதவிக்கு வந்த பிறகு ஒரு புதிய திட்டத்தைக் கூடச் செயல்படுத்தவில்லை. டிஎன்பிஎஸ்சி மூலமாக 401 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம், பத்திரப்பதிவுத் துறையின் ‘ஸ்டார் 3.0′ திட்டம் போன்றவை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. தற்போதைய அரசு வெறும் பணி நியமன ஆணையை மட்டுமே வழங்கியுள்ளது.
`நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை `திறன் மேம்பாடு’ எனப் பெயர் மாற்றியுள்ளனர். மேலும், பயனடைந்த மாணவர்களின் காட்சிப் பதிவுகளை இணையத் திலிருந்து நீக்கியுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத் துறையை தவெகவின் அய்டி விங் போலப் பயன்படுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையையும், கல்வெட்டுகளை நீக்கும் வேலையையும் விடுத்து, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை திசை திருப்பு வதற்காக, தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஒலிப்பதிவு வெளியிட்டு நாடகமாடுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பதில் சொல்லாமல், தங்களது ஆலோசகர்கள் எழுதிக் கொடுக்கும் திரைக்கதையை வைத்து த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நடிக் கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு வேடிக்கை பார்ப்போம். அதன் பிறகு பொதுமக்களே தெருவில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *