கடும் வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அய்ரோப்பிய கண்டத்தில் கடந்த ஜூன் 20 முதல் தற்போது வரை முன்னெப்போதுமில்லாத வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. உலகளவில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்ப அலைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
