புதுடில்லி, ஜூலை 5- ஏ.அய் மூலம் வழங்கப்படும் போலியான தீர்ப்புகளை சகித்துக்கொள்ள முடியாது என்று கடும் வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ரூ.87 கோடி கடன் வழக்கில் வழங்கிய தீர்ப்பு செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.அய் மூலமாக வழங்கப்பட்டது.
இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகிய அமர்வில் 3.7.2026 அன்று விசாரணைக்கு வந்தபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், ‘‘சட்ட ரீதியாக தீர்ப் பளிக்கும் நடைமுறைகளில் ஏ.அய் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.
இது ஆபத்தான போக்கு ஆகும். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான தீர்ப்புகளை கண்டிப்பாக சகித்துக்கொள்ள முடியாது.
ஏ.அய்யை மட்டுமே சார்ந்து செயல்படும் நிலைக்கு நம்மை தள்ளிவிடும் ஆபத்து உள்ளது’’ எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், நீதிமன்றங்களில் ஏ.அய் பயன் படுத்தும் விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
