சென்னை, ஜூன் 25- அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நேரடி நியமனங்கள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
விதிமுறைகளின்படி நியமனம்: 2025ஆம் ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன நடைமுறைகள் அனைத்தும், அரசின் உரிய அரசாணை விதிமுறைகளின்படியே துல்லியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
நம்பகத்தன்மை உறுதி
இந்த நியமன செயல்முறைகள் யாவும் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வர்களின் தகுதியை உறுதி செய்ய, அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சான்றிதழ் சரிபார்ப்பின் (Certificate Verification) போது நேரடியாகவும், மிகக் கவனமாகவும் ஆய்வு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
