ஜோதிடரின் யோக்கியதை இதுதான்! பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது

1 Min Read

ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) பணியாற்றி வருகிறார். இந்த அஞ்சல் நிலையத்துக்கு அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜோதிடரான சண்முகம் (வயது 63) என்பவர் அஞ்சல் தொடர் சேமிப்பு (ஆர்.டி.) கணக்கு வைத்திருக்கிறார்.

எனவே இதுதொடர்பாக பேச அவர் பெண் அதிகாரியின் கைப்பேசி எண்ணை வாங்கி சென்று உள்ளார். பின்னர் அவர் அந்த கைப்பேசி எண்ணில் பெண் அதிகாரியை அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் சண்முகத்தை அந்த பெண் அதிகாரி எச்சரித்தார். எனினும் தொடர்ந்து அவர் அஞ்சல் நிலையத்துக்கு சென்று பெண் அதிகாரியிடம் ஆபாசமாக பேசுவதும், தொடுவதும் என பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகத்தை கைது செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *