அய்தராபாத் ஜூன் 22- தெலங்கானாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயதான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மியாபூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஷேக் சனா (வயது 19). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் நேற்று நடைபெற்ற ‘நீட்’ மறுதேர்வு எழுத இருந்தார்.
தற்கொலை
இந்நிலையில், மாணவி ஷேக் சனா நேற்றுமுன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் மறுதேர்வால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஷேக் சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ஷேக் சனாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என ஷேக் சனா கடிதம் எழுதி வைத்த நிலையில் அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
