போக்குவரத்துக்கு இடையூறு ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 14- சென்னை மாநகராட்சியில் சீரான போக்குவரத்துக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

சென்னை மாநக ராட்சியில் சீரான போக்குவரத்துக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சென்னை மாநகராட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 12.6.2026 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை முறையாகச் செயல்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பயன்பாட்டை முழுமையாகத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

அம்மா உணவகங்கள் பராமரிக் கப்பட்டு தரமான உணவு வழங்கப் படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தெரு நாய்களை கட்டுப் படுத்தப்படுவதுடன், சாலைகளில் திரியும் மாடுகளை காப்பகங்களில் அடைக்கவும், அதை செயல்படுத்தாத மாட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான சாலைகள் அமைப்ப துடன், சீரான போக்குவரத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். வளைவான பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வழிகாட்டல்படி சாலைகள் அமைக்கப்படவேண்டும்.

பூங்காக்கள் பராமரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுடன், மழைநீா் வடிகால்களில் தடுப்புச் சுவா்களை உயா்த்திக் கட்டவேண்டும்.

தெருவிளக்குகள் எரிவதை உறுதிப்படுத்துவதுடன், கட்டட அனுமதி விண்ணப்பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன், க.கற்பகம், செ.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *