திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் புரவலர் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொறுப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில் சென்னை –பெரியார் திடலில் நடைபெற்றது.

10.06.2026 அன்று காலை 12.00 மணி அளவில் தொடங்கி நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் கடந்தகால செயல்பாடுகள் பற்றி பொறுப்பாளர்கள் எடுத்துக் கூறினார்கள். வருங்காலச் செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதலை புரவலர் தனது உரையில் சுட்டிக் காட்டினார். ‘‘திராவிடர் வரலாற்றின் உண்மை வரலாறு, திரிபுவாதங்களை உரிய காலத்தில், உரிய வகையில் விளக்கிடும் நிகழ்ச்சிகள், திராவிடர் வரலாறு சார்ந்த அகழாய்வு, தொல்லியல் குறிப்புகளை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படல் வேண்டும்’’ என புரவலர் குறிப்பிட்டுப் பேசினார். ஓராண்டு காலத்திற்குள் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் குறித்தும் – தலைப்பு, பேசிட வேண்டிய ஆய்வு அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பற்றியும் முன்னரே திட்டமிடல், உறுத் செய்திடல் அவசியம் என வலியுறுத்திப் புரவலர் பேசினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டிய வேலைத்திட்டம் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொறுப்பாளர்களாக கீழ்காண்போர் நியமிக்கப்பட்டனர்.

தலைவர் : முனைவர் பெ. ஜெகதீசன்
துணைத்தலைவர் : பேராசிரியர் அ. கருணானந்தன்
செயலாளர் : முனைவர் வெ. மாரப்பன்
இணைச் செயலாளர்கள் : முனைவர் அ. ரஷீத்கான்
முனைவர் பொ. தேன்மொழி
செயற்குழு உறுப்பினர்கள் : முனைவர் இ. இனியன்
முனைவர் ச. தீபிகா
பேராசிரியர் செல்வி
பொருளாளர் : வீ. குமரேசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *