தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மய்யங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மய்யங்கள் தொடங்குவதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக டி-சேவா மய்யத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டலங்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா இணையம் மற்றும் திறன் மேம்பாட்டு மய்யங்களை தொடங்குவதற்கு தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய பான் அட்டைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான பயணச் சீட்டுகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், ஆதார்ப் பாவனையால் பண பரிமாற்றம், மைக்ரோ ஏடிஎம் சேவைகள், பண வைப்பு, சுகாதாரம், பைக் மற்றும் கார் காப்பீடுகள், நிலுவை கட்டணங்கள், 1000-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பாடநெறிகளில் இணைய தளப் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு, 500-க்கும் மேற்பட்ட திறன்களுக்கு திறன் சான்றிதழ் தேர்வுக்கான பதிவு, 100-க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளுக்கான மதிப்பெண் தேர்வு பதிவு மற்றும் பிற இணைய தள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கலாம்.

வேறுபட்ட இணையதள சேவைகள் வழங்குவதன் மூலம் விண்ணப்பிப்போர் தன்னித்திறன் பெற்று தொழில் தொடங்கவும் முடியும். டி-சேவா சென்டர் தமிழ்நாட்டில் 5000 தொழில்முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கவும் மற்றும் 15 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளோர் www.tsevaonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 8179955744 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *