ஆண்டிபட்டியில் மனிதநேய விழா… தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக குருதிக்கொடை முகாம்

ஆண்டிப்பட்டி, ஜூன் 3- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக 31/05/2026 அன்று ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் 93 – பிறந்தநாள் மகிழ்வாக அவசரத் தேவைக்கான குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் முதல் குருதி கொடுத்து துவக்கி வைத்தவர் ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகத் தலைவர், தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன், நகர் கழகச் செயலாளர் இரா. ஆண்டிச்சாமி, செ.கண்ணன் மற்றும் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் இதில் தகுதியுள்ள 40 குருதிக் கொடையாளர்களிடம் சேகரித்த யூனிட்களை பெரியகுளம் அரசு மருத்துவமனை குருதி வங்கிப் பொறுப்பாளர் மனிதநேய மருத்துவர் த.பாரதி மருத்துவக் குழுவினரிடம் வழங்கப்பட்டது.
உடன் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை பொறுப்பாளர் மருத்துவர் க.பிரேமலதா, தேனி மாவட்ட உலக அமைதி குழு 10 ருபீஸ் இரா.ஜெயபாலன், அனைத்து மக்களின் நட்பை பெற்ற பெ.ஆண்டனி, கோடாங்கி பட்டி மனிதநேய காப்பக இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *