விடுதலை சந்தா

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளரும்,, ஆசிரியருமான இர.கிருஷ்ண மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் அ.சங்கீதா இணையரின் மகன்கள் ச.கி.வீரமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 548 மதிப்பெண்களும், ச.கி செம்மொழியரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 446 மதிப்பெண்களும் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து ஓராண்டு விடுதலை சந்தா (2000) வழங்கினர். மாணவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *