சென்னை, மே 24- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் 22.5.2026 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஏழை மக்களின் வாழ் விடங்களின் மேம்பாட்டுக் காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறு குடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் ஜோசப் விஜய் 22.5.2026 அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
