கோவை, மே 23- கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
இந்த நிகழ்வு பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடிய விடிய போராட்டங்களும் நடந்து வருகின்றன.
மேலும் ஒருவர் கைது
இந்த வழக்கில் ஏற்கெனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது நண்பரான மோகன் ராஜ் என்பவ ரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கார்த்திக், காவல் துறையின ரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு (fracture) ஏற்பட்டது.
தற்போது அவர் பலத்த காவலுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடிய விடிய போராட்டம்
சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
