சென்னை, மே 18- மாதந்தோறும் நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கணவன் மற்றும் மனைவி இணைந்து கூட்டுக் கணக்கு (Joint Account) தொடங்குவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் தங்களது முதலீட்டிற்கு லாபகரமான வருவாயைப் பெற முடியும்.
அதிகபட்ச முதலீடு!
இத்திட்டத்தின் கீழ் இணையர் இணைந்து அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
வட்டி விகிதம்
தற்போதைய நிலவரப்படி, இந்த சேமிப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முதிர்வுக்காலம்
இத்திட்டத்தின் மொத்த முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
ரூ.15 லட்சம் முதலீட்டிற்கு
எவ்வளவு லாபம்?
எவ்வளவு லாபம்?
நீங்கள் இத்திட்டத்தில் அதிகபட்சத் தொகையான ரூ.15 லட்சத்தை முதலீடு செய்யும் போது கிடைக்கும் வருமானக் கணக்கீடு பின்வருமாறு:
மாதந்தோறும் வருமானம்
வட்டித் தொகையாக மட்டும் இணையருக்கு மாதம் ரூ. 9,250 வரை கைக்கு வரும். மொத்த வட்டி லாபம்: 5 ஆண்டுகள் நிறைவடையும் போது, வட்டியாக மட்டுமே மொத்தம் ரூ. 5.55 லட்சம் வருமானமாகக் கிடைக்கும்.
முதிர்வுத் தொகை
5 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த அசல் தொகையான ரூ. 15 லட்சமும் உங்களுக்கு அப்படியே பாதுகாப்பாகத் திரும்பக் கிடைக்கும்.
குறிப்பு: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தங்களின் ஓய்வூதியக் காலத் தேவைகளைத் தடையின்றி நிறைவு செய்ய இந்த அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்அய்எஸ்) பெரிதும் உதவிகரமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
