சென்னை, மே 16- தமிழ்நாடு முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக முக்கிய துறைகளில் அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3ஆவது நாளாக இன்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
* உதயநிதி துணை முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாராக இருந்த பிரதீப் யாதவ் அய்டி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம்;
* மீன் வளத்துறை இயக்குநர் முரளிதரன், வேளாண் துறை இயக்குநராக இடமாற்றம்;
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம்;
* மாநில மனித உரிமை ஆணைய ராக முருகேஷ் நியமனம்;
* வேளாண் துறை இயக்குநராக முரளிதரன் நியமனம்;
* சிறீபெரும்பதூர் துணை ஆட்சிய ராக நல்லசிவன் நியமனம்;
* கைத்தறி முதன்மை செயலாள ராக டி.என்.வெங்கடேஷ் நியமனம்;
* வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாராக பி.சங்கர் நியமனம்;
* காயத்ரி கிருஷ்ணன் – சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்;
* லதா – கூட்டுறவுத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
