தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

சென்னை, மே 15 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடியுரிமையைத் துறந்த பிறகு தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும் என்ற நிலையில், இந்த நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சொந்த நாட்டுக்கு திரும்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது கையில் மை இருந்ததை வைத்து கண்டுபிடித்து குடியேற்றத்துறை நடத்திய விசாரணையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்த போதிலும், தங்களுடைய பழைய இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்யாமல், அதனைப் பயன்படுத்தி இந்த மூன்று பேரும் வாக்களித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய சட்டப்படி, ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது, அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடும். இதன் விளைவாக, இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையும் அவர் இழந்துவிடுகிறார்.

வாக்களிப்பு

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “இந்தியக் குடியுரிமை இல்லாத ஒருவர் வாக்களிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும். வெளிநாடுகளில் குடியேறி குடியுரிமை பெறுபவர்கள், தங்களது இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் பலர், ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் சட்டரீதியான விதிகளை அறியாமல் வாக்களிக்க முற்படலாம். எனவே, குடியுரிமை மாற்றம் தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் எனும் வாதமும் வலுத்துள்ளது.

ஜனநாயகத்தில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுச் செய்வது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *