தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி

சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டப் பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று (13.5.2026) கூடியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முறைப்படி முன்மொழிந்தார்.

தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவையில் தங்களது நிலைப்பாட்டை விளக்கினர்.

பாஜகவை வீழ்த்தவே ஆதரவு: காங்கிரஸ் அதிரடி

பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தவெக அரசுக்கு காங்கிரஸ் தனது முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில்:

“தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கவே நாங்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கையுடைய 5 கட்சிகள் ஒன்றிணைந்து வழங்கிய ஆதரவினால்தான், தவெக அரசு இன்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையை எட்டியுள்ளது.”

நிபந்தனையுடன் கூடிய ஆதரவு: இடதுசாரிகள் நிலைப்பாடு

தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி, தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்கவே இந்த ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டார். எனினும், “மக்களுக்குப் பாதகமான திட்டங் களை அரசு கொண்டு வந்தால், அதனை எதிர்க்க கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தயங்காது” என எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய தளி ராமச்சந்திரன், “பாஜக ஒரு மலைப்பாம்பைப் போல மாநிலக் கட்சிகளை விழுங்கி வருகிறது. மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவுமே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார்.

அமமுக-விலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

144 வாக்குகள் பெற்று
தவெக அரசு வெற்றி!

தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு களுக்கு இடையே, தவெக அரசு இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தனது பலத்தை உறுதி செய்துள்ளது.

வாக்கெடுப்பு விவரம்:

நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன:

ஆதரவு வாக்களித்தோர்: 144 பேர் எதிர்த்து வாக்களித்தோர்: 22 பேர் நடுநிலை வகித்தோர்: 5 பேர்

வாக்கெடுப்பின் முடிவில், பெரும்பான் மைக்குத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு முதலமைச்சர் விஜய்க்கு இருப்பதை அடுத்து, தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாகச் பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி  பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, எவ்வித அரசியல் நெருக்கடியுமின்றி தனது பணிகளைத் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *