2ஆவது நாளாகக் கூடியது தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கு வாழ்த்து!

சென்னை, மே 12- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராகத் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பேசினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (12.5.2026) காலை கூடியது. அவைத் தலைவர் தேர்தலில் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் புதிய அவைத் தலைவரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

துணைத் தலைவராக ரவிசங்கர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். புதிய சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துத் தெரிவித்துப் பேசினர்.

மீண்டும் ஆதரவு

அமமுக எம்எல்ஏ காமராஜ்: விஜய் அரசுக்கு முதலில் ஆதரவு தெரிவித்ததாகச் சொல்லப்பட்ட மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ், இன்று சட்டமன்றத்தில் பேசுகையில் மீண்டும் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அரசு சிறப்பாகச் செயல்பட, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். தராசு போல செயல்பட வேண்டும் – அவைத் தலைவருக்கு இதயபூர்வமாக வாழ்த்துகள்!

பழனிசாமி பேசி முடித்ததும், அதிமுக பிளவு குழுவினரால் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வேலுமணி கை உயர்த்தி வாய்ப்பு கோரினார். அவைத் தலைவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவரும் வாழ்த்திப் பேசினார்.

தேமுதிக, பிரேமலதா: சட்டமன்றத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் மக்களுக்கு தெரியும் படி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அவைத் தலைவர் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

சட்டமன்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்த முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற வேண்டும்.

பா.ம.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவைத் தலைவரையும், துணைத் தலைவரையும் வாழ்த்தி உரையாற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *