‘நான் முதல்வன்’ திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கமா? தி.மு.க. ஒருபோதும் இதை அனுமதிக்காது – டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை’நான் முதல்வன்’ திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கமா? தி.மு.க. ஒருபோதும் இதை அனுமதிக்காது – டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

1 Min Read

சென்னை, மே 9- கடந்த 5 ஆண்டு களாக நடந்த மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்றது நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் படித்து பல மாணவர்கள் யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக முன் னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை யளிக்கின்றன.

இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும்!

இதை எங்கள் தி.மு.கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். திராவிட மாடல் திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மவுனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு தேர்தல் முடிவுகளுக்கு பின் அண்மையில் மீண்டும் தாக்கீது அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *