வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரக் கோளாறு ஆம்பூர் தொகுதியில் விவிபேட் சீட்டுகள் மூலம் உறுதி செய்யப்பட்ட தி.மு.க. வெற்றி!

1 Min Read

ஆம்பூர், மே 5- திருப்பத்தூர் மாவட்டத்திற் குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

விவிபேட் சீட்டுகள் மூலம்

21 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் வில்வநாதன் 72,340 வாக்குகள் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான தவெக வேட்பாளர் இம்தியாஸை விட (64,742 வாக்குகள்) 7,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 44,832 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார்.

இரவு 7.30 மணியளவில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, எதிர்பாராத விதமாக இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.

இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் இருந்த வாக்குச்சீட்டுகளை எண்ண முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. வெற்றி

இரவு 8.15 மணியளவில் விவிபேட் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின், இறுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி: வில்வநாதன் (திமுக): 73,187 வாக்குகள் இம்தியாஸ் (தவெக): 65,860 வாக்குகள் இறுதியாக, திமுக வேட்பாளர் வில்வநாதன் 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட சிறு தாமதத்திற்குப் பிறகு வெளியான இந்த முடிவு, திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *