தி.மு.க. தலைவருக்கு அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கடிதம்

2 Min Read

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய இந்த நேரத்தில், எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், ஆழ்ந்த உணர்வுகளுடனும் உறுதியான நம்பிக்கையுடனும்,

அசைக்க முடியாத ஒற்றுமை உணர்வுடனும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாடு மக்களின் தீர்ப்பு தற்போது தி.மு.க.க்கு சாதகமாக இல்லாமல் தோன்றினாலும், வரவிருக்கும் நாட்கள், இந்த முடிவு உங்கள் ஆட்சியின் உண்மையான மதிப்பை பிரதிபலிப்பதல்ல என்பதையும்,

உங்கள் தலைமைத்துவத்தின் பெரும் பங்களிப்பை மதிப்பீடு செய்வதில் ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்பதையும் உறுதியாக நிரூபிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் தீர்ப்பு தி.மு.க.வை எதிர்க்கட்சித் தளத்தில் அமர்த்தியிருந்தாலும்,

உங்கள் தலைமையில் நிகழ்ந்த வரலாற்று சாதனை களும் சிறப்பு மிக்க ஆட்சியும், இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடமாக பதிந்துள்ளது.

நீங்கள் உறுதியாக நிலைநிறுத்திய “திராவிட மாடல்” என்பது ஒரு நிர்வாகக் கட்டமைப்பாக மட்டும் அல்லாது, சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலிமையான இயக்கமாகும்.

உங்கள் துடிப்பான தலைமையின் கீழ், தமிழ்நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியையும் மக்கள் முகமாகிய ஆட்சியையும் அடைந்தது. மேலும், ஒன்றிய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பாதுகாக்க நீங்கள் எடுத்த விடா முயற்சிகள், கூட்டாட்சி கொள்கையின் உண்மையான உணர்வை வலுப்படுத்தியுள்ளன.

மாநிலங்களின் சுயாட்சியே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டின் கண்ணியத்தையும் அரசியல் உரிமைகளையும் காக்கும் காவலராக நீங்கள் உறுதியாக நின்றீர்கள்.

சமூக நீதி நிலைநாட்டுவதற்கான உங்கள் இடையறாத போராட்டம்—

குறிப்பாக அனைத்து இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்தது— சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். மேலும், கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் உங்கள் முன்முயற்சிகள், சமத்துவத்திற்கும் மனித கண்ணியத்திற்குமான உங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

உங்கள் சிறந்த தலைமையும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியுடன் பதிவு செய்கிறது. உங்கள் பயணம், நாடு முழுவதும் எண்ணற்ற மனிதர்களுக்கும் இயக்கங்களுக்கும் ஊக்கமாக திகழ்கிறது.

மதிப்பிற்குரிய தலைவரே

தலைமை என்பது பதவியால் அல்ல, கொள்கைகளால் வரையறுக்கப்படுகிறது — அந்த அளவில், உங்கள் தலைமை இன்றும் மேலும் பிரகாசிக்கிறது. உங்கள் பார்வையும் துணிச்சலும் வளப்படுத்திய திராவிட மரபு, மீண்டும் புதிய வலிமையுடன் எழுந்து, சமூக நீதியின் பாதையை எதிர்காலத்திலும் வழி நடத்தும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த முக்கியமான கட்டத்தில், எங்களின் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

நாங்கள் வெறும் பார்வையாளர்களாக அல்லாது, சமூக நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சி உரிமை களுக்கான தொடர்ந்த போராட்டத்தில் உறுதியான துணைநிலையாளர்களாக உங்களுடன் நிற்கிறோம்.

மிகுந்த மரியாதையுடனும் ஒற்றுமை உணர்வுடனும்,

தங்கள்,

– கோ. கருணாநிதி

பொதுச் செயலாளர்,

அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *