ஓட்டு போட பேருந்து வசதி ஏற்படுத்தாதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 7- சட்டமன்றத் தேர்தலில், சொந்த ஊருக்கு சென்று வாக்காளர்கள் ஓட்டு போட போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாதது குறித்து, ஆணையம் அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், ஏப்., 23இல் நடந்தது. இந்த தேர்தலில், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற வாக்காளர்கள் பலர், போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்தாததால், ஓட்டு போட முடியவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சவுந்தர், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு, மனுவுக்கு தேர்தல் கமிஷன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *