கொல்கத்தா, மே 7 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 207 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அங்கு மம்தா தலைமையிலான 15 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
வன்முறை
அதேசமயம், தேர்தல் முடிவு களுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாஜகவின் வெற்றி கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக, கொல் கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் அப்பட்டமான அராஜகம் அரங்கேறியுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் கும்பல் அங்குள்ள இறைச்சி கடைகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். மேலும், அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தையும் அவர்கள் சேதப்படுத்தினர். “தேர்தலுக்கு முன் ‘நம்பிக்கை’ பற்றிப் பேசியவர்கள், தற்போது ‘பயங்கரவாதத்தை’ வழங்கி வருகிறார்கள். மாற்றமானது புல்டோசருடன் வந்துள்ளது,” எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது அங்கு மத்திய படைகள் இருந்த போதிலும், அவர்கள் தலையிடாமல் வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
டெரிக் ஓ பிரையன் ஆவேசம்
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
“இதுதான் பாஜகவின் உண்மை முகம். இந்த வன்முறை ஒளிப்படங் களை உலகம் பார்க்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
