ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 6 எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் குடியரசுத் தலைவரிடம் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, மே 06 பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியி லிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களை (எம்பிக்கள்) உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

6 எம்.பி.க்கள் விலகல்

கடந்த மாதம் 24-ஆம் தேதி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இவர்களில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (5.5.2026) குடியரசுத் தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் பகவந்த் மான், கட்சி மாறியவர்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் அவர் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார். இதற்கிடையில், ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி ராகவ் சதா, பஞ்சாப் அரசு தங்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி யுள்ளார்.

அரசு இயந்திரம் அத்துமீறல்: “ஆம் ஆத்மி அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கட்சி மாறியவர்களைக் குறிவைத்து துன் புறுத்துகிறது,” என்று ராகவ் சதா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் முறையீடு: ராகவ் சதா மற்றும் அவருடன் மூன்று பேர் குடி யரசுத் தலைவரைச் சந்தித்து, தங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் குறித்து மனு அளித் தனர். இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *