மேற்கு வங்கம், அசாமில் பா.ஜ.க. வெற்றி மக்களின் ஆணையை திருடிய செயல் ராகுல்காந்தி கடும் விமர்சனம்

1 Min Read

புதுடில்லி, மே 06 மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியானது, ஜனநாயக முறைப்படி கிடைத்த வெற்றி அல்ல, மாறாக மக்களின் ஆணையைத் திருடிய செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அசாமில் அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இந்த அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மக்கள் ஆணையை திருடிய செயல்

“அசாம் மற்றும் மேற்கு வங்க மக்களின் தேர்தல் ஆணையைத் திருடியிருப்பது, இந்திய ஜனநாய கத்தை அழிக்கும் நோக்கத்தை நோக்கி பாஜக எடுத்து வைத்துள்ள மிகப்பெரிய அடியாகும்.”

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியைக் கண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும், பிற கட்சியைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, இது குறுகிய மனப்பான்மை என்று சாடினார்.

ஜனநாயகமே முக்கியம்: இது ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியது அல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்தைப் பற்றியது.

சிறுமைத்தனமான அரசியல்: தனிப்பட்ட அரசியல் லாபங் களுக்காகவோ அல்லது மற்ற கட்சிகளின் தோல்வியைக் கொண் டாடுவதற்காகவோ இது நேரமல்ல.

ஜனநாயக விழுமியங்களைச் சிதைப்பதே பாஜகவின் இலக்கு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். “சிறுமைத் தனமான அரசியலைத் தூக்கி எறியுங்கள். இது இந்தியாவைக் காப்பதற்கான போராட்டம்” என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *