சென்னை, மே 5- சென்னையில் வீடற்ற வர்களுக்காக ரூ.9 கோடியில் 6 புதிய தங்குமிடங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.
இரவு நேரக் காப்பகங்கள்
சென்னையில் வீடற்றவர்கள் மற்றும் தெருவோரம் வசிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி ரூ.9 கோடி மதிப்பீட்டில் ஆறு புதிய இரவு நேரக் காப்பகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கடுமையான வானிலை மாற்றங்களின் போது வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிதாக அமைக்கப் படவுள்ள ஆறு காப்பகங் களும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களாகக் கட்டப்படும். இந்தக் காப்பகங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி படுக்கை வசதிகள், கழிப்பறைகள், குளியலறைகள், குடிநீர் வசதி, தனிப்பட்ட உடைமைகளை வைக்க லாக்கர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தங்குமிடம் மட்டுமின்றி, இங்கு தங்குபவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை வழங்கவும் மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.
தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் 50க்கும் மேற்பட்ட காப்பகங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பருவமழைக் காலங் களிலும், கோடை காலத்தின் உச்சத்திலும் வீடற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் தேவை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள காப்பகங்கள் போது மானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டே இந்த ஆறு புதிய இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “நகர்ப்புற ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதே எங்களின் இலக்கு. ஏற்கெனவே செயல்பட்டு வரும் காப்பகங்களில் உள்ள நெரிசலைக் குறைக்கவும், இதுவரை காப்பக வசதி இல்லாத பகுதிகளுக்கு இந்தச் சேவையை விரிவு படுத்தவும் புதிய கட்டடங்கள் உதவும். ஒப்பந்த நடைமுறைகள் முடிந்தவுடன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்” என தெரிவித்தனர்.
மாநகராட்சியின் இந்த முடிவைச் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். “வேகமாக வளர்ந்து வரும் சென்னை போன்ற பெருநகரங்களில், வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் என்பது ஒரு அடிப்படை தேவை. இது அவர்களுக்கு வெறும் தங்குமிடமாக மட்டுமல்லாமல், அவர் களின் கண்ணியமான வாழ்விற்கான ஒரு வழியாகவும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, சென்னை யின் தெருக்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
