“சேவை செய்யவே சீருடை” நடுசாலையில் பா.ஜ.க. அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் காட்சிப் பதிவு

3 Min Read

மும்பை, மே 5 மும்பையில் சாலை நடுவே அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரைக் கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு பரவலானது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் மும்பை ஒர்லி பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அமைச்சர் கிரீஷ் மகாஜன் தலை மையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொண்டர்கள் வந்து சேர தாமதம் ஆனதால் பேரணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பேரணிக்காக வந்த அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் தொண்டர்கள் நடுசாலையில் நின்றனர். அது முக்கியமான சந்திப்பு என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட தீனா சவுதரி என்ற பெண் தனது காரில் இருந்து இறங்கி நேரடியாக அமைச்சரிடம் சென்று இந்த இடத்தைக் காலி செய்யுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

அவர் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த காட்சிப் பதிவு வைரலானது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ரீனா நடந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தனது காட்சிப் பதவில், ”சம்பவத்தன்று நான் எனது மகளை மியூசிக் கிளாசில் இருந்து மாலை 4.45 மணிக்கு பிக்கப் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

வாகனத்திற்குள் 25 நிமிடம் இருந்தேன். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள காரைவிட்டு இறங்கினேன். பா.ஜ.கவினரின் போராட்டம் காரண மாக என்னை போன்று ஏராளமானோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருந்தனர்.

சாலையில் இரண்டு பேருந்துகளைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்ததால் மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. ஒன்றரை மணி நேரமாக ஒவ்வொரு காவல்துறை அதிகாரியிடமும் சென்று ரோட்டில் நிறுத்தி இருக்கும் பேருந்துகளை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டேன். அப்படி எடுத்தால் மற்ற வாகனங்கள் யூ டர்ன் எடுத்து செல்ல முடியும் என்று கூறினேன்.

ஆனால் எந்த அதிகாரியும் அதனைக் கேட்கவில்லை. சேவை (serve) என்ற சொல்லைச் சிறப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்; ஏனெனில், நீங்கள் (காவல்துறையினர்) சீருடை அணியும்போது, பொதுச் சேவையில் ஈடுபடுகிறீர்கள்.

அது, ஒரு பெண்ணுக்கு மட்டுமல்லாமல், எந்தவொரு மனிதரிடமும் அலட்சியமாகவோ, அவமரியாதையாகவோ அல்லது மிரட்டும் வகையிலோ நடந்து கொள்வதற்கான உரிமையையோ அல்லது அனுமதியையோ உங்களுக்கு வழங்குவதில்லை. நீங்கள் அனைவருமே ஒரே குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.

அது பொதுமக்களின் மீது காட்டும் முழுமையான அலட்சியமும், கடுகளவும் அக்கறையின்மையுமே ஆகும். எனவே, தயவுசெய்து உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். எனது குடும்பத்தில் எனது தந்தை உட்பட 8 பேர் பேர் ராணுவத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

பேரணியை முன்னின்று நடத்திய மகாராட்டிர மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பேரணி யில் நான் கூறியதைக் காதுகொடுத்துக் கேட்க வாவது முயன்ற ஒரே நபர் அவர்தான்.

அவர் சொன்ன பிறகுதான் இரண்டு பேருந்துகளும் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே எங்களால் வாகனங்களை எடுக்க முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிந்தது குறித்தும் ரீனா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி தண்ணீர் பாட்டிலை எறியவில்லை. எனக்கு முன்பு சாலை தடுப்பு இருந்ததால் காவல்துறையினரின் கவனத்தை ஈர்க்க தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *