மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!

1 Min Read

சென்னை, ஏப். 27- சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 31.33 அடியாக உள்ளது. அணைப்பகுதியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், தற்போது 2064 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர். அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆறு வழியாக வரும் நீர். நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் போன்றவற்றால் செம்பரம்பாக்கத்திற்கு நீர் கிடைக்கிறது

சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதமும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னையின் குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொடர்ந்து நீர் அனுப்பப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *