புதுடில்லி, ஏப்.22- இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் விலை உயர்வு காரணமாக அனைத்துத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது:
வீட்டுப் பயன்பாடு: 8.1 சதவீதம் சரிவு. வணிகப் பயன்பாடு: 48 சதவீதம் சரிவு. தொழிற்சாலைப் பயன்பாடு: 75.5 சதவீதம் பெரும் சரிவு.
திட்டமிடாத அரசு – திண்டாடும் மக்கள்
வளைகுடா போர் போன்ற உலகளாவிய சூழல்களைக் கையாள்வதில் ஒன்றிய அரசு உரிய திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“புகையில்லா அடுப்புத் திட்டம் மூலம் பெண்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, தற்போது எரிவாயு விலையை விண்ணைத் தொடச் செய்ததன் மூலம், ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது”
தேர்தல் வெற்றிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு, சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சமையல் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, இந்தியக் குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

