கொல்கத்தா, ஏப்.16- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்கள் மட்டும் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 23ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் வருகிற 29ஆம் தேதியும் நடக்கிறது.
“மேற்கு வங்கத்தில் எங்களை தோற்கடிக்க பாஜக, மத்திய படைகளை பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணயைம் பாஜக-வுக்கு துணை போகிறது” என தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ். இந்த நிலையில் அபிஷேக் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்கள் மத்திய படைகளால் வேண்டுமென்றே சோதனைக்குள்ளாகி வருவதாக மம்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா கூறியதாவது:-
நான் இன்று கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது, மத்திய படைகள் என்னுடைய காரை மறித்து பரிசோதனை செய்ய முயன்றனர். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஒவ்வொரு நாளும் என்னுடைய காரை சோதனை செய்யுங்கள் பார்ப்போம்.
அதேபோல் அபிஷேக் காரை மட்டுமே குறிவைத்து தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தலால், தேர்தல் பணிக்காக வந்துள்ள பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்துகின்றன என்று மம்தா குற்றம்சாட்டியிருந்தார். மற்றவர்களை விடுகின்ற நிலையில், இந்த தலைவர்கள் மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?. இது தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. ஒன்றிய அமைச்சர்கள் பணத்தை கொண்டு வருகிறார்கள். நிதி அமைச்சர் கார்டுகளை வநியோகம் செய்கிறார். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
