கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதி நினைவு நாளையொட்டி (14/04/2026) கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அவரது படத்திற்க்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகரத் தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், பெரியார் பிஞ்சுகள் மா.அன்புச் செல்வன், மா.அறிவுச் செல்வன், வே.அதியன், வே.சரித்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவுநாள் மரியாதை
Leave a Comment

