இன்று அம்பேத்கர் பிறந்த நாள் (14.4.1891) தீண்டப்படாதோர் என்று ஆக்கப்பட்டவர்களுக்கு எந்தத் தானியம் ஊதியமாக அளிக்கப்பட்டது?

1 Min Read

இந்து விவசாயிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு மிகக் குறைந்த அளவில் ஊதியம் கொடுக்க முடியும்.இவ்வாறு செய்வது அவர்களின் நலனுக்கு ஏற்றதாயிருக்கும். ஆனால், தீண்டாதவர்களுக்கு இதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவர்கள் ஏதேனும் ஊதியம் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் பட்டினிதான். பேரம் பேசும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்; இல்லையென்றால் அவர்கள் வன்முறைக்கு உள்ளாவார்கள்.

தீண்டாதவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் பணமாகவோ அல்லது தானிய மாகவோ கொடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் தீண்டாதோருக்குக் கொடுக்கப்படும் தானியம் “கோபரஹா” எனப்படுகிறது .”கோபரஹா” என்றால் ஒரு விலங்கின் சாணத்தில் உள்ள தானியம் என்று பொருள். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தானியம் விளைந்து, முற்றிப் பயிர் அறுவடையாகி, உலர்த்தப்பட்டுக் களத்து மேட்டில் பரப்பப்படுகிறது. அதன்மேல் மாடுகள் சுற்றிச்சுற்றி நடக்கவிடப்படுகின்றன. இந்த மாடுகளின் குளம்புகளால் மிதிக்கப்பட்டு தானியம் வைக்கோலிலிருந்து பிரிக்கப்படுகிறது. இவ்வாறு பிணையலடித்துச் சுற்றிவரும் போது, மாடுகள் வைக்கோலையும் அதனுடன் சேர்ந்துள்ள தானியத்தையும் தின்றுவிடு கின்றன. இவற்றை மாடுகள் அளவுக்கதிமாகத் தின்றதால் சரியாகச் செரிக்காமல் மறுநாள் சாணத்துடன் தானியமும் சேர்ந்து வெளியாகிறது. இந்தச் சாணத்தை வடிகட்டி அதிலிருந்து தானியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தத் தானியம் தீண்டாதவர்களான தொழிலாளர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. இதைத்தான் அவர்கள் மாவாக்கி ரொட்டி செய்து உண்டார்கள்…

-அம்பேத்கரின் “எழுத்தும் பேச்சும் ”

தொகுதி -9,இயல் -7

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *