முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

1 Min Read

புதுடில்லி, ஜூன் 6– காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டில் இருசக்கர வாக னங்கள் விற்பனை 17 சதவீதமாகவும், கார் விற்பனை 8.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும் செல்போன் விற்பனை 7 சதவீதமாக சரிந்துள்ளது.

மறுபுறம் செலவுகள் மற்றும் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, கல்வி கட்டணம், உள் நாட்டு பணவீக்கம் உள்பட கிட்டதட்ட எல்லாமே விலை உயர்ந்துவிட்டன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு சாமானிய இந்தியரும் அனுபவித்து வரும் பொருளாதார அழுத்தம். பிரமாண்ட நிகழ்வுகளை காட்டிலும் அன்றாட காட்சிகளின் எதார்த்தத்தில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு அல்ல, சாமானி யருக்கான பொருளாதாரத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *