பெரியகுளம், மே 25 தேனி மாவட்டம் பெரியகுளம் கலைவாணி அரங்கத்தில், 24-05-2025 நேற்று காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் 53- வது பெரியாரியல் பயிற்சி பட்டறை 71 மாணவர்களுடன் எழுச்சியுடன் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் ம.சுருளிராஜ், நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன். தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட காப்பாளர் ச.இரகுநாகநாதன். மாவட்ட செயலாளர் பூ.மணிகன்டன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சரவணன், ப.க.செயலாளர் ப.மோகன், கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன். விளையாட்டு அணி மாநில செயலாளர் ம.பூவரசன். திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் பெரியார் மணி. ஒன்றிய மகளிரணி தலைவர் முருகேஸ்வரி. ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
10 மணிக்கு முதல் வகுப்பாக, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் மா.அழகிரிசாமி வகுப்பு எடுத்தார். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகனும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வமும், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வினை ஈட்டி கணேசனும், பேய் ஆடுதல். சாமி ஆடுதல் என்னும் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமனும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும் தொடர்ந்து வகுப்பு எடுத்தார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை காணொலி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்டது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உரையாற்றினார்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுரையாற்றினார். பொதுக்குழு உறுப் பினர் பி.பேபிசாந்தாதேவி குடும்பத்தினர் சார்பில் பயிற்றுனர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப் பித்தனர். மாவட்ட துணை செயலாளர் லோ.முத்துச் சாமி நன்றி கூறினார்.
71 பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற சிறப்பித்தனர். ஆண்கள் 38 பெண்கள் 33 – ––- இதில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பள்ளி மாணவர்கள் 55 சிறப்பாக வகுப்பை கவனித்து குறிப்பெடுத்த மாணவர்களுக்குப் புத்தகங்களாக பரிசாக வழங்கப்பட்டன.
பரிசு பெற்றோர்: முதல் பரிசு பிரியா, இரண்டாம் பரிசு லாவண்யா, மூன்றாம் பரிசு கோபி கிருஷ்ணா, நான்காம் பரிசு நாகலட்சுமி, அய்ந்தாம் பரிசு தரணி, ஆறாம் பரிசு வைஷ்ணவி, ஏழாம் பரிசு சுருதி.