இந்தத் தேர்தலில் சங்கிக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி

0 Min Read

விழுப்புரம், ஏப்.15- ‘தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் டில்லி அணியை, தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்’ என துணை முதலமைச்சர் உதயநிதி பேசினார்.

விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, அவர் பேசியதாவது:

இந்த தேர்தலில் வெல்வது டில்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பதை முடிவு செய்து, டில்லி அணியை வீழ்த்துங்கள். தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை. தேர்தலின்போது மட்டும் தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வருகிறார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ., சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *