வாலாஜா நகரத்தில் செ.வீரமணியின் படத்திறப்பு – நினைவேந்தல்

viduthalai
1 Min Read

அரியலூர், மே 7– அரியலூர் -வாலாஜா நகரத்தை சேர்ந்த மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மேனாள் பொதுக்குழு உறுப்பினர் ந.செல்லமுத்துவின் மகன்  வீரமணியின் படத்திறப்பு நிகழ்ச்சி 5.5. 2025 திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் வாலாஜா நகரம் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கழக தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையேற்க, தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனை செல்வன், மாநில ப.க அமைப்பாளர் தங்க .சிவமூர்த்தி, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் , அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, காப்பாளர் சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் தெய்வ. இளையராஜா வீரமணியின் படத்தினை திறந்து வைத்தார்.

வஞ்சினபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் க.தனபால், புலவர் தமிழ் களம் அரங்கநாடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன்உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இரங்கலுரையாற்றினர்.

மறைந்த வீரமணியின் சகோதரர் காவல்துறை உதவி ஆய்வாளர் செ. பாண்டியன் நன்றி கூறினார் . மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் க. மணிகண்டன் ,செந்துறை தா.மதியழகன், விளாங்குடி விக்னேஷ், குழுமூர் சுப்பராயன், திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ கோபிநாதன் ; மாவட்ட இளைஞரணி துணை தலைவர் மதியழகன், வீரபிரபாகரன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *