இதுதான் பாஜக ஆளும் மாநிலத்தின் அவலம்!

Viduthalai
0 Min Read

ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இளம்பெண் ஒருவர் இறந்துவிட்டார். பல கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊருக்கு உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறிவிட்டனர்.
பெண்ணின் குடும்பத்தினரோ பரம ஏழைகள் அவர்களும் வேலைக்குச் சென்றால்தான் சில நூறு ரூபாய்கள் கையில் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் உடலைக் கொண்டு செல்ல வாகனத்திற்கு கொடுக்க பணமில்லை.
இதனால் இறந்த மகளின் உடலை சாலை ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டு இருந்த இறந்துபோன பெண்ணின் தந்தைக்கு சாலையில் சென்றுகொண்டு இருந்த நபர் ஒருவர் உதவ முன்வந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் உடலை ஊர் கொண்டு போய்ச்சேர்த்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *