கழகக் களத்தில்…!

2 Min Read

9.1.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2529
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: 2024 – கடந்து வந்த பாதை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

11.1.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
தமிழர் திருநாள் பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பொ.போஸ் * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * உரை: தென்குமரித் திருவள்ளுவர் விழாவின் சிறப்பு – மோ.அன்பழகன் (மாவட்டச் செயலாளர், உ.தி.பேரவை), அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டுச் சிறப்பு – சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.), பார்ப்பனரால் தமிழர் பண்பாட்டில் நடந்த சீரழிவுகள் – சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: மா.பால் ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் * நன்றியுரை: செ.செல்லத்துரை (மாநகரச் செயலாளர்)

பெரியார் பேசுகிறார் 5ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகர தலைவர்) * சிறப்புரை: பெ.சிவசக்தி * தலைப்பு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் * நன்றியுரை: அரங்க.வேலாயுதம் (செயலாளர், ஆலத்தூர் ஒன்றியம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *