வாக்குகளுக்கு பணம் அளிக்கும் பாஜக– ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா?

1 Min Read

அரவிந்த் கெஜ்ரிவால் வினா

புதுடில்லி, ஜன.3 வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆத ரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி விரைவில் அறி விக்கப்பட உள்ளது. டில்லியில் 3 ஆவது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதி உள்ள கடித்த்தில்,
‘‘கடந்த காலங்களில் பாஜக செய்த தவறு களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்குச் சரியானது என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?” என வினா எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *