பா.ஜ.க. ஆட்சியில் விளிம்புநிலை மக்கள்மீது வன்கொடுமை அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, ஜன.1 பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

வன்கொடுமை
இது தொடா்பாக, எக்ஸ் வலைதளத்தில் காா்கே நேற்று (31.12.2024) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் சட்டமேதை பி.ஆா்.அம் பேத்கரை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித் தாா். விளிம்புநிலை மக்களுக்கு எதிரான இதே மனநிலை, பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் 2 தினங்களுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டுள்ளாா். ஒடிசாவின் பாலசோரில் பழங்குடியினப் பெண்கள் இருவா் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப் பட்டுள்ளனா்.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் வகுப்புவாத தாக்கு தல்கள் மற்றும் காவல் துறையினரின் செயலற்றத் தன்மையால் 3 தலித் குடும்பங்கள் தாங்கள் வசிக்கும் பகுதியைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
அரியானாவின் பிவா னியில் தாழ்த்தப்பட்ட மாணவி ஒருவா் தனது பட்டப் படிப்பு தோ்வுக்கு கட்டணம் செலுத்த பண மில்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். மகாராட்டிரத்தின் பல் கரில் குழந்தை பிரசவித்த பழங்குடியின பெண் ஒருவா், தீவிர சிகிச்சை பிரிவு (அய்சியூ) வசதியுள்ள மருத்துவமனையைத் தேடி 100 கி.மீ. பய ணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் உயிரிழந் துள்ளாா்.

மனுவாதத்தின் தாக்கம்
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மோடி ஆட்சியில், தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினா், பின்தங்கிய பிரிவினா் மற்றும் சிறு பான்மையினா் மீதான வன்கொடுமைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. ஒன்றிய-மாநில பாஜக அரசு களின்கீழ், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் ‘மனுவாதத்தின்’ தாக்கத்தால் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா்.

குற்றங்கள் அதிகரிப்பு
தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, தலித்-பழங்குடியின பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிராக ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குற்றம் இழைக் கப்படுகிறது. இது, கடந்த 2014-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம்.
140 கோடி இந்தி யா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மீறப் படுவதை காங்கி ரஸ் ஒருபோதும் அனு மதிக்காது. பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பின் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சிந்தனையை காங்கிரஸ் தொடா்ந்து எதிா்க்கும் என்று இவ்வாறு அந்த பதிவில் காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *