ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ம.பி.தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்நாத்தை களமிறக்க காங்கிரஸ் முடிவு.

* எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகள் என கூறும் மோடி, தனது பக்கத்தில் அஜித் பவார், அரியானாவில் பிரிஜ் பூஷன் ஆகியோரை வைத்துக் கொண்டு எப்படி பேச இயலும் என்கிறார் பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமானால், கோவில் விழாக்களை தடை செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* மணிப்பூர் வன்முறைக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலக முடியாது என்கிறார் முதலமைச்சர் பைரன் சிங்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவில் உள்ள நீதிபதி ஒருவர், “இரண்டு ஒன்றிய அமைச்சர்களின் ஊழியர்கள்” என்று கூறிக் கொள்பவர்கள், காசோலை பவுன்ஸ் வழக்கை நீண்ட நாட்களுக்கு:ஒத்திவைக்கக் கோரி மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் நீதிமன்றத்தில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

* உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாஜக செயலற்றதாக இருப்பதாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, 2024இல் பெண் வாக்காளர்கள் காவி கட்சியை அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள் என்று கூறினார்.

தி இந்து:

* 2018 ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டுள்ள 604 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 454 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்தார்.

 தி டெலிகிராப்:

* உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் ‘ஜெய் சிறீ ராம்’ என்று முழங்க இமாம் ஒருவர் வற்புறுத்தப்பட்ட தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *