மகாராட்டிரத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அமைச்சர்களை நியமிக்க முடிவு

2 Min Read

மும்பை, டிச.17 மகாராட்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அரசு பதவியேற்பதிலும், அமைச்சர்கள் பதவியேற்பதிலும் இழுபறி நீடித்து வந்தது.
நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 5-ஆம் தேதி புதிய அரசு பதவி யேற்றது. 10 நாள்களுக்கு பிறகு நேற்று (16.12.2024) புதிய அமைச்சர்கள் பதவி யேற்றுக் கொண்டனர். அவர்கள் நாக்பூரில் உள்ள ஆளுநர் இல்லத்தில் பதவியேற்றனர். பா.ஜ.கவில் இருந்து 19 பேரும், சிவசேனாவில் இருந்து 11 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். மொத்தம் 43 அமைச்சர்கள் பதவி யேற்க முடியும். ஆனால் 42 பேர் பதவி யேற்றுக்கொண்டுள்ளனர்.
பா.ஜ.க சார்பாக ஓரங்கட்டப்பட்டு இருந்த பங்கஜா முண்டே மற்றும் கணேஷ் நாயக் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவில் இருந்து இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள்
முந்தைய அரசில் 29 பேர் அமைச்சர்களாக இருந்தனர். மேற்கு மகாராஷ்டிராவில் இருந்து 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மராத்வாடாவில் இருந்து 6 பேருக்கும், விதர்பாவில் இருந்து 9 பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மொத்தம் 4 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவசேனா சார்பாக பெண்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. அமைச்சர் பதவியை அதிக மான சட்டப் பேரவை உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து 2.5 ஆண்டுகள் கழித்த பிறகு சரியாக செயல்படாத சில அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதிய அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாக மூன்று கட்சி தலைவர்களும் தெரிவித்தனர்.

புதியவர்களுக்கு வாய்ப்பு
இது குறித்து துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய், ”2.5 ஆண்டுகள் அமைச்சர் பதவி என்ற விதியை ஏற்றுக்கொண்டு எங்களது கட்சி அமைச்சர்கள் உத்தரவாதம் எழுதிக் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் 2.5 ஆண்டுகள் கழித்து அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பா.ஜ.கவை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேயிக்கு ஒன்றியஅமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மகாராட்டிரா அமைச்சரவையில் அவரது மகன் நிதேஷ் ரானேயிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் செல் வத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ ருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *