தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் சென்னை, மணப்பாக்கம் இல்லத்திற்கு இன்று (15.12.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் வனத் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை

Leave a Comment