இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

Viduthalai
1 Min Read

மும்பை, டிச.15 இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டடத்தில் அய்இடி ரக வெடிகுண்டு வைக் கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ மின்னஞ் சலுக்கு 12.12.2024 அன்று மிரட்டல் வந்துள் ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மின்னஞ்சலில், அனுப்பியவர் கட்டடத்தில் அய்இடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது அய்ந்து நாள்களுக்குள் தொலைவிலிருந்து செயல்படுத்தப் படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனுப்பியவர் உக்ரை னுக்கான சகோதரத்துவ இயக்கத் தில் சேருமாறு ஆர்பிஅய் ஆளுநரை யும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே காவல்துறையினர் அந்த வளா கத்தில் சோதனை நடத்தியதாகவும், ஆனால் சந்தேகப்படும்படியான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து தெற்கு மும்பையில் உள்ள மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். முன்னதாக இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் ரிசர்வ் வங்கிக்கு கடந்த மாதமும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *