‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)

1 Min Read

இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *