புதுடில்லி, டிச.9- 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு டிச.20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் 3, ஒடிசா, மேற்குவங்கம், அரியானாவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். டிச.20-ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே நடைபெறும்.