உருமாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது – ஆய்வில் கண்டுபிடிப்பு

2 Min Read

ஒமைக்ரான் உள்ளிட்ட உரு மாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது என ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் தனியார் தடுப்பூசி மய்யங்களில் போடப்படுகிறது. இந்த தருணத்தில் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, கோவேக்சின் 2ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி 6 மாதங்களுக்கு பின்னர் 51 பேரது மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களுக்கு 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு 215 நாட்களுக்கு பின்னர் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிபோட்டு, அதற்குப்பின் 28 நாட்கள் கழித்தும் மாதிரிகள் பெறப்பட்டன.

இந்த மாதிரிகள் ஒப்பீடு செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு

இதில் கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தி மேம்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுபற்றி புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கஜானன் சக்பால் கூறும்போது,

 பி.1 மற்றும் டெல்டா, பீட்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி மேம்பட்டுள்ளது என கூறினார். ஆய்வு முடிவில், கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர், ஹோமோலோகஸ் பி.1-வுக்கு எதிராக 19.11 மடங்கு, பிற உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக 16.51 மடங்கு, பீட்டாவுக்கு எதிராக 14.70 மடங்கு, ஒமைக்ரானுக்கு எதிராக 18.33 மடங்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

விரைவுபடுத்த…

இந்த ஆய்வு முடிவுகள், உரு மாறிய கரோனா வகைகளுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறபோது, தொற்றின் தீவிர தாக்குதல், மருத்துவமனை சேர்க்கை, உயிரிழப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *